ஒலிம்பிக் பதக்க சிறப்பு பயிற்சித் திட்டம்: சானியா மிர்ஸா உள்பட 8 பேர் விடுவிப்பு

இந்திய விளையாட்டு ஆணையத்தின் ஒலிம்பிக் பதக்க சிறப்பு பயிற்சித் திட்டத்தில் இருந்து பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா உள்பட 8 வீரர்கள் பெயர்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இந்திய விளையாட்டு ஆணையத்தின் ஒலிம்பிக் பதக்க சிறப்பு பயிற்சித் திட்டத்தில் இருந்து பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா உள்பட 8 வீரர்கள் பெயர்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.
2020, 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கம் வெல்ல வேண்டும் என்ற நோக்கில் டாப்ஸ் எனப்படும் சிறப்பு பயிற்சித் திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதியுதவியுடன் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு முழு பயிற்சி தரப்படுகிறது. பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு தீவிர பயிற்சி தரப்படுகிறது.
இதில் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா பெயரும் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் அவர் தற்போது கர்ப்பம் தரித்துள்ளதால் அவரது பெயர் விடுவிக்கப்பட்டுள்ளது. அதே போல் 5 மல்யுத்த வீரர்கள் பிரவீண் ரானா, சத்யவர்த் கடியன், சுமித், லலிதா, சரிதா, போன்றவர்களும், குத்துச்சண்டை வீரர்கள் தேவேந்திர சிங், சாருபாலா தேவி ஆகியோர் பெயர்களும் விடுவிக்கப்பட்டுள்ளன.
தடகள வீரர்கள் லில்லி தாஸ், சஞ்சீவனி யாதவ், தேஜஸ்வனி சங்கர், ஆகியோர் 2020-ம் ஆண்டு வரை டாப்ஸ் திட்டத்தில் பயிற்சி பெறுவர். மேலும் தடகள வீரர்கள் தருண்குமார், மோகன்குமார் ஆகியோர் பெயர்களும் இடம் பெற்றுள்ளது.
துப்பாக்கி சுடுதலில் 14, பாட்மிண்டனில் 10, குத்துச்சண்டையில் 6, மல்யுத்தத்தில் 4, தடகளம், வில்வித்தை, பளுதூக்குதலில் தலா 2 பேர் என மொத்தம் 41 பேர் இடம் பெற்றுள்ளனர். மிஷன் ஒலிம்பிக் செல் என்ற குழு இதற்கான வீரர்களை தேர்வு செய்தது. இந்த பட்டியல் அவ்வப்போது பரிசீலிக்கப்படும் என சாய் இயக்குநர் ஜெனரல் நீலம் கபூர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com