உலக வில்வித்தை போட்டி நிலை-2-ல் இந்தியா தலா 1 வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றது.
அன்டாலியாவில் உலக வில்வித்தை போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் வெள்ளிக்கிழமை காம்பெளண்ட் பிரிவில் இந்திய மகளிர் அணியைச் சேர்ந்த ஜோதி சுரேகா, முஸ்கன் கிரார், திவ்யா தயாள் ஆகியோர் துவக்கத்தில் தடுமாறினாலும், சீன தைபே அணியை வீழ்த்தி வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
கலப்பு அணி பிரிவில் அபிஷேக் வர்மா-ஜோதி இணை 158-155 என்ற புள்ளிக்கணக்கில் பெல்ஜியத்தின் ரெஜினால்ட்-சாரா இணையை வென்று வெண்கலம் வென்றனர்.
ரெக்கர்வ் பிரிவில் தீபிகா குமாரி, புரோமிளா, அங்கிதா பகத் ஆகியோர் சனிக்கிழமை சீன தைபே அணியை வெண்கலத்துக்கான போட்டியில் எதிர்கொள்கின்றனர். இந்திய ஆடவர் அணி தோல்வியடைந்து
வெளியேறியது.