சீன ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பிவி சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
சீன ஓபன் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து தாய்லாந்து புசானன் ஆன்பம்ரங்ஃபனை எதிர்கொண்டார். இதில், அவர் முதல் செட்டை 21-12 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற 2-ஆவது செட்டையும் அவர் 21-15 என எளிதில் கைப்பற்றினார். இதன்மூலம், 21-12, 21-15 என்கிற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இதையடுத்து, ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் இந்தோனேஷிய வீரரை எதிர்கொண்டார். இதன் முதல் செட்டில் அவர் 10-21 என்ற புள்ளிகள் கணக்கில் மோசமாக இழந்தார். தொடர்ந்து, நடைபெற்ற 2-ஆவது செட்டில் எழுச்சி கண்ட ஸ்ரீகாந்த் அதை 21-9 என எளிதில் கைப்பற்றினார். இதையடுத்து, வெற்றியை தீர்மானிக்கும் 3-ஆவது செட்டிலும் அதே 21-9 என கைப்பற்றினார். இதன்மூலம், 10-21, 21-9, 21-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற ஸ்ரீகாந்த் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.