ஆஸி. டெஸ்ட் தொடரில் நன்றாக செயல்படுவேன்: முரளி விஜய் நம்பிக்கை

ஆஸி. டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படுவேன் என தமிழக வீரர் முரளி விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆஸி. டெஸ்ட் தொடரில் நன்றாக செயல்படுவேன்: முரளி விஜய் நம்பிக்கை

ஆஸி. டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படுவேன் என தமிழக வீரர் முரளி விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடக்க வீரராக முரளி விஜய் இடம் பெற்றிருந்தார். ஆனால் முதல் இரு ஆட்டங்களில் 20, 6. மற்றும் 0, 0 என ஆட்டமிழந்தார். இதனால் மீதமுள்ள 3 டெஸ்ட் ஆட்டங்களுக்கான அணியில் இடம் பெறவில்லை. பின்னர் கவுண்டி அணியான எஸ்ùஸக்ஸ் அணியில் இடம் பெற்ற முரளி விஜய் ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்களை விளாசினார்.
 தற்போது ஆஸி. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி, நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்றுள்ளார். அவர் புதன்கிழமை கூறியதாவது:
 நான் எனது ஆட்டநுணுக்கத்தில் ஒட்டுவேலை செய்ததில்லை. கவுண்டி அணிக்காக மட்டுமே சிறப்பாக விளையாடவில்லை. இதற்காக எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை. வாய்ப்பு தந்தமைக்காக எஸ்ùஸக்ஸ் அணிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பதற்காக கவுண்டி அணியில் விளையாடவில்லை.
 சிறந்த ஆட்டத்தை ஆடவும், மீண்டும் ரன்களை குவிக்கும் திறனை பெறவும் விளையாடினேன். மூன்று முக்கிய ஆட்டங்களில் அங்கு விளையாடியதால் நம்பிக்கை ஏற்பட்டது.
 ஆஸி. சுற்றுப்பயணத்துக்கு முன்பு ஏராளமான பயிற்சி ஆட்டங்களில் ஆட இந்திய அணி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. நான் அங்கு சிறப்பாக செயல்படுவேன் என நம்பிக்கை உள்ளது. முதல் டெஸ்ட் ஆட்டத்துக்கு முன்பு நாங்கள் பயிற்சி ஆட்டங்களில் ஆடுவது ஊக்கம் தரும். முந்தைய 2014-15 ஆஸி. தொடரில் முரளி விஜய் 60.25 சராசரியுடன் மொத்தம் 482 ரன்களை குவித்திருந்தார். ஆஸி. சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியானின் சவாலை சந்திக்க தயாராக உள்ளேன் எந்ன்றார் விஜய்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com