ரஞ்சி கோப்பை: ஹைதராபாத் 565-க்கு டிக்ளேர்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாட்டுக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் தனது முதல் இன்னிங்ஸில் 186 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 565 ரன்கள் விளாசி டிக்ளேர் செய்தது.


ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாட்டுக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் தனது முதல் இன்னிங்ஸில் 186 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 565 ரன்கள் விளாசி டிக்ளேர் செய்தது.
டாஸ் வென்று பேட் செய்த ஹைதராபாதில் அக்ஷத் ரெட்டி அதிகபட்சமாக 250 ரன்கள் விளாசினார். தமிழ்நாடு தரப்பில் முகமது 3 விக்கெட்டுகள் சாய்த்தார். இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய தமிழ்நாடு, முதல் நாள் முடிவில் 79 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்துள்ளது. அபினவ் முகுந்த் 101, இந்திரஜித் 24 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இதனிடையே, அருணாசல பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் மிúஸாரம் 410 என்ற வெற்றி இலக்குடன் ஆடி வரும் நிலையில், புதன்கிழமை முடிவில் 59 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்துள்ளது. ஆட்டம் வியாழனுடன் முடிவடைவதால் டிரா ஆக வாய்ப்புள்ளது. இதேபோல், அஸ்ஸாமுக்கு எதிரான ஆட்டத்தில் 428 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆடி வரும் திரிபுரா, புதன்கிழமை முடிவில் 27.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 68 ரன்களே எடுத்துள்ளது. இதனால் அஸ்ஸாம் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com