சையத் மோடி சர்வதேச பாட்மிண்டன்: விலகினார் பி.வி.சிந்து

சையத் மோடி சர்வதேச சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இருந்து விலகினார் பி.வி.சிந்து.

சையத் மோடி சர்வதேச சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இருந்து 
விலகினார் பி.வி.சிந்து.
சீனாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலக டூர் பைனல்ஸ் போட்டியில் கவனம் செலுத்துவதற்காக சிந்து இந்த முடிவை எடுத்துள்ளார்.
சையத் மோடி போட்டியில் நடப்பு சாம்பியன் சிந்து, சீனாவுன் குவாங்ஷு நகரில் நடைபெறவுள்ள உலக டூர் போட்டியில் பங்கேற்க உள்ளார்.
இதுதொடர்பாக அவர் இந்திய பாட்மிண்டன் சம்மேளனத்துக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் தேசிய பயிற்சியாளர் கோபிசந்த், போட்டி அமைப்பாளர்களுக்கும் தெரிவித்துள்ளார். உலக டூர் பைனல்ஸ் போட்டியில் உலகின் தலைசிறந்த 8 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
கெளரவமான இப்போட்டியில் பதக்கம் வெல்லும் முனைப்பில் உள்ளார் சிந்து. கடந்த ஆண்டு துபையில் நடைபெற்ற போட்டியில் இறுதி ஆட்டத்தில் 
தோல்வியுற்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com