ஐஎஸ்எல்: டெல்லி-புணே ஆட்டம் டிரா

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்துப் போட்டியில் டெல்லி டைனமோஸ் எஃப்சி - எஃப்சி புணே சிட்டி அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
ஐஎஸ்எல்: டெல்லி-புணே ஆட்டம் டிரா

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்துப் போட்டியில் டெல்லி டைனமோஸ் எஃப்சி - எஃப்சி புணே சிட்டி அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
தில்லியில் ஜவாஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தை நேரில் காண, 10,283 பேர் திரண்டிருந்தனர். விறு விறுப்புடன் தொடங்கிய ஆட்டத்தில் முதலில் டெல்லி அணி கோலடிக்க, கடைசி நேரத்தில் புணே அணியும் ஒரு கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தது.
முன்னதாக, ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணிகளுமே தங்களுக்கான கோல் வாய்ப்புக்காக ஆக்ரோஷமாக முன்னேறி வந்தன. இதில் 4-ஆவது நிமிடத்தில் புணே அணிக்கான கோல் வாய்ப்பு நூலிழையில் நழுவிச் சென்றது. 
இந்நிலையில், ஆட்டத்தின் 16-ஆவது நிமிடத்தில் டெல்லி அணி தனக்கான கோல் முயற்சியை தொடங்கியது. டெல்லி வீரர் நாராயண் தாஸ் கோல் போஸ்ட் நோக்கி அடித்த ஒரு பந்து, புணே கோல் கீப்பர் விஷால் கைத் கைகளில் தஞ்சமானது. 24-ஆவது நிமிடத்தில் 6-ஆவது முறையாக கிடைத்த கார்னர் வாய்ப்பை தவறவிட்டது புணே அணி.
தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் 44-ஆவது நிமிடத்தில் டெல்லி முதல் கோல் அடித்தது. அணி வீரர் மார்கோஸ் டெபார் பாஸ் செய்த பந்தை லாவகமாக கடத்திச் சென்று கோலடித்தார் ராணா காராமி.
இதனால் முதல் பாதி முடிவில் டெல்லி 1-0 என முன்னிலை பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதியில் இரு அணிகளுமே ஆக்ரோஷமாக ஆடின. எந்த அணிக்கும் எளிதாக கோல் வாய்ப்பு கிடைக்காததால் டெல்லி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஆட்டத்தின் 88-ஆவது நிமிடத்தில் கோலடித்தது புணே.
அணியின் எமிலியானோ அல்ஃபாரோ பாஸ் செய்த பந்தை நேராக கோல் போஸ்ட்டுக்குள் அனுப்பினார் டியேகோ கார்லோஸ். இறுதியாக ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனாகி நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com