இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் அபூர்வ சாதனைப் படைத்தார்.
இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 367 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் கூடுதலாக 56 ரன்களுடன் முன்னிலைப் பெற்றது. இதில் மே.இ.தீவுகள் அணியின் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் அடுத்தடுத்த 3 இன்னிங்ஸ்களில் தொடர்ந்து 5 அல்லது அதற்கு மேற்கபட்ட விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் மே.இ.தீவுகளின் ஜாம்பாவன் வீரர்கள் மைக்கெல் ஹோல்டிங், மால்கம் மார்ஷல் ஆகியோருக்கு இணையாக இந்த அபூர்வ சாதனையைப் படைத்தார்.