கோவையில் நடைபெற்று வரும் 21-ஆவது ஜேகே டயர், எப்எம்எஸ்சிஐ தேசிய கார்பந்தய சாம்பியன் போட்டியில் சென்னை வீரர் அஸ்வின் தத்தா முதலிடம் பெற்றுள்ளார்.
மும்பையின் நயன் சாட்டர்ஜி முதலில் சிறப்பாக செயல்பட்டாலும், கார்த்திக் தரணியுடன் இடையில் மோதியதால், இருவரும் வெளியேற நேர்ந்தது. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி அஸ்வின் தத்தா 1:01: 422 நேரத்தில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பெற்றார்.
இரண்டாவது பந்தயத்தில் ஜோசப் மேத்யூ முதலிடத்தையும், சச்சின் செüத்ரி இரண்டாம் இடத்தையும், ராகுல் ரங்கசாமி, விஷ்ணுபிரசாத் ஆகியோர் முறையே 3 மற்றும் 4-ஆவது இடங்களைப் பெற்றனர்.