சீன ஓபன் பாட்மிண்டன்: வெற்றியுடன் தொடங்கினார் கிடாம்பி ஸ்ரீகாந்த்

இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் சீன ஓபன் முதல் சுற்றில் டென்மார்க் வீரரை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
சீன ஓபன் பாட்மிண்டன்: வெற்றியுடன் தொடங்கினார் கிடாம்பி ஸ்ரீகாந்த்

இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் சீன ஓபன் முதல் சுற்றில் டென்மார்க் வீரரை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். 

சீன ஓபன் பாட்மிண்டன் போட்டிகள் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் இன்று (புதன்கிழமை) தனது முதல் சுற்றில் டென்மார்க்கைச் சேர்ந்த ராஸ்மஸ் கெம்கேவை எதிர்கொண்டார். 

இதில், கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றை 21-9 என எளிதில் கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற 2-ஆவது சுற்றில் எழுச்சி பெற்ற ராஸ்மஸ், கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு இணையாக விளையாடினார். இதனால், இருவரும் 19-19 என சரிசமமாக புள்ளிகளை குவித்து வந்தனர். 

இந்த நிலையில் கிடாம்பி ஸ்ரீகாந்த் தொடர்ந்து 2 புள்ளிகளைப் பெற்று 2-ஆவது செட்டையும் கைப்பற்றினார். 

இதன்மூலம், 21-9, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற கிடாம்பி ஸ்ரீகாந்த் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

முன்னதாக, செவ்வாய்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் போட்டிகளில் இந்திய வீராங்கனை பிவி சிந்து ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். அதேசமயம் மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com