பதிப்பாளர் வெள்ளையாம்பட்டு சுந்தரம்(84) சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள அவரது வீட்டில் உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை(மே 31) காலமானார்.
அவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மறைந்த சுந்தரம் சென்னையில் உள்ள சேகர் பதிப்பகத்தின் உரிமையாளர் ஆவார். தீவிர தமிழ்ப் பற்றாளரான அவர் கல்வெட்டு, தொல்லியல் சார்ந்த நூல்களை ஆர்வமுடன் வெளியிட்டுள்ளார். இதுவரை 1,100 நூல்களை சுந்தரம் பதிப்பித்துள்ளார்.
அவரது உடல் எம்.ஜி.ஆர்.நகர் மயானத்தில் வியாழக்கிழமை (ஜூன் 1) தகனம் செய்யப்பட்டது. தொடர்புக்கு: 97890 72478.