பிரவீண் சக்ரவர்த்தி குறிப்பிட்ட தவெக கூட்டணியில் இல்லை! இந்திய கம்யூ. லஞ்சம், போதை இல்லா தமிழகம்! அமைச்சரவைக் கூட்டத்தில் 436 திட்டங்கள் முன்வைப்பு!ஜூன் 18ல் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது!ரஜினி அழைத்தும் மறுப்பு தெரிவித்து பாஜகவில் இணைந்தேன்! அண்ணாமலைஅரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! முதல்வா் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது! பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம்! உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

வீட்டிலேயே சுகப் பிரசவ விவகாரம்: ஹீலர் பாஸ்கர் கைது

கோவையில் சர்ச்சைக்குரிய வகையில் தனியார் நிறுவனம் ஒன்றால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'சுகப் பிரசவ முகாம்' திடீர் என்று ரத்து செய்யப்பட்டது.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2018, 8:06 pm IST

கோவையில் சர்ச்சைக்குரிய வகையில் தனியார் நிறுவனம் ஒன்றால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'சுகப் பிரசவ முகாம்' திடீர் என்று ரத்து செய்யப்பட்டது.

கோவையில் உள்ள கோவைப்புதூர் பகுதியில் அனடாமிக் தெரபி என்ற தனியார் அமைப்பின் சார்பாக 'இனிய சுகப் பிரசவம்'  என்னும் பெயரில் ஒரு நாள் மருத்துவ முகாம் ஒன்று வரும் 26-ஆம் தேதி நடத்தப்பட இருப்பதாக அறிவிப்பு புதன்கிழமையன்று  வெளியானது. இதில் மருத்துவரிடமும் செல்லாமல் வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொள்வதே சுகப் பிரசவம் ஆகும். இதுவே சிறந்த வழிமுறை ஆகும்’என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய இதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என இந்திய மருத்துவக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் வலியிறுதியிருந்தன.

இந்நிலையில், வீட்டில் சுகப்பிரசவம் பார்க்க பயிற்சி அளிக்கப்படும் என அறிவித்த ஹீலர் பாஸ்கர் கோவையில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். மோசடி புகாரில் கோவை நிஷ்டை மைய உரிமையாளர் ஹீலர் பாஸ்கரை குனியமுத்தூர் போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி கூறியதாவது:

அறிவியலுக்கு புரம்பாக செயல்படுவது, வதந்தியை பரப்புவது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்படும்.  வீட்டிலேயே பிரசவம் பார்க்கலாம், தடுப்பூசி வேண்டாம் என பொய் பிரசாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  எச்சரித்தார்.

சமீபத்தில் திருப்பூர் யூ ட்யூப் உதவியுடன் வீட்டிலேயே சுகப்பிரசவத்திற்கு கணவன் முயற்சித்த சம்பவத்தில் அவரது மனைவி கிருத்திகா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.