விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

மருத்துவ சிகிச்சைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது: ஆளுநர் பெருமிதம்

மருத்துப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெருமிதம் தெரிவித்தார். 

News image

சென்னை மியாட் மருத்துவமனையில் நவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை மையத்தை புதன்கிழமை திறந்து வைத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். 

Updated On :11 அக்டோபர் 2018, 2:48 am IST


மருத்துப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெருமிதம் தெரிவித்தார். 
சென்னை மியாட் மருத்துவமனையில் நவீன எம்.ஆர்.ஐ. (3டி எம்.ஆர்.ஐ. கருவி) பரிசோதனை மையத்தை புதன்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:
தமிழகத்தில் மருத்துவத் துறையில் தனியாரின் பங்களிப்பு கடந்த 100 ஆண்டுகளாக உள்ளது. 
சுகாதாரத் துறையில் மற்ற மாநிலங்கள் பின்பற்றும் அளவுக்கு தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே, மேலை நாடுகளிலிருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக தமிழகத்துக்கு வருவதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. 
நோயின் தன்மையை துல்லியமாக அறியும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை முறையில், நோயாளிக்கு கதிரியக்க பாதிப்பு ஏற்படாது என்பது சாதகமான அம்சமாகும்.
நோய் என்ற பொது எதிரியை மட்டுமே நோக்கத்தில் கொண்டு தரமான மருத்துவ சிகிச்சை அளிப்பதில் அனைத்து மருத்துவப் பிரிவினரும் ஆக்கபூர்வமாகச் செயல்பட வேண்டும் என்றார் ஆளுநர் புரோஹித். 3டி எம்.ஆர்.ஐ. கருவியின் சிறப்பு அம்சங்கள் குறித்து மியாட் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பிருத்வி மோகன்தாஸ், கதிரியக்க சிகிச்சைப் பிரிவின் முதுநிலை மருத்துவர் மதன் ஆகியோர் விளக்கினர்.
இந்த நிகழ்ச்சியில், மியாட் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் பி.வி.ஏ.மோகன்தாஸ், தலைவர் மல்லிகா மோகன்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.