அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

மருத்துவ சிகிச்சைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது: ஆளுநர் பெருமிதம்

மருத்துப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெருமிதம் தெரிவித்தார். 

News image

சென்னை மியாட் மருத்துவமனையில் நவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை மையத்தை புதன்கிழமை திறந்து வைத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். 

Updated On :10 அக்டோபர் 2018, 9:18 pm


மருத்துப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெருமிதம் தெரிவித்தார். 
சென்னை மியாட் மருத்துவமனையில் நவீன எம்.ஆர்.ஐ. (3டி எம்.ஆர்.ஐ. கருவி) பரிசோதனை மையத்தை புதன்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:
தமிழகத்தில் மருத்துவத் துறையில் தனியாரின் பங்களிப்பு கடந்த 100 ஆண்டுகளாக உள்ளது. 
சுகாதாரத் துறையில் மற்ற மாநிலங்கள் பின்பற்றும் அளவுக்கு தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே, மேலை நாடுகளிலிருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக தமிழகத்துக்கு வருவதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. 
நோயின் தன்மையை துல்லியமாக அறியும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை முறையில், நோயாளிக்கு கதிரியக்க பாதிப்பு ஏற்படாது என்பது சாதகமான அம்சமாகும்.
நோய் என்ற பொது எதிரியை மட்டுமே நோக்கத்தில் கொண்டு தரமான மருத்துவ சிகிச்சை அளிப்பதில் அனைத்து மருத்துவப் பிரிவினரும் ஆக்கபூர்வமாகச் செயல்பட வேண்டும் என்றார் ஆளுநர் புரோஹித். 3டி எம்.ஆர்.ஐ. கருவியின் சிறப்பு அம்சங்கள் குறித்து மியாட் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பிருத்வி மோகன்தாஸ், கதிரியக்க சிகிச்சைப் பிரிவின் முதுநிலை மருத்துவர் மதன் ஆகியோர் விளக்கினர்.
இந்த நிகழ்ச்சியில், மியாட் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் பி.வி.ஏ.மோகன்தாஸ், தலைவர் மல்லிகா மோகன்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.