ஆடி மருந்துக் கஞ்சி

பண்டைக்காலம் முதல் ஆடி மாதம் மருந்துக் கஞ்சி தயாரித்துக் குடிக்கும் வழக்கம் இருந்தது. அதிமதுரம், ஜீரகம், சிவப்பு வெங்காயம், திரிகடுகு,
ஆடி மருந்துக் கஞ்சி

பண்டைக்காலம் முதல் ஆடி மாதம் மருந்துக் கஞ்சி தயாரித்துக் குடிக்கும் வழக்கம் இருந்தது. அதிமதுரம், ஜீரகம், சிவப்பு வெங்காயம், திரிகடுகு, திப்பிலி, குன்னிவேர், உழிஞ்சை வேர், சீற்றா முட்டி, கடலாடி வேர் ஆகியவற்றைச் சமமாக எடுத்து தூளாக்கிச் சலித்து துணிப்பையில் கட்டி பழைய அரிசியில் இட்டு கஞ்சி வைத்து துணிப்பையைப் பிழிந்து பின் அருந்துவதே மருந்துக் கஞ்சி.
 இருமல், மூச்சு முட்டுதல் முதலியவற்றிலிருந்து நிவாரணம் பெற இம் மருந்து சக்தி வாய்ந்தது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
 ஆடி மாதத்து காற்றிலும், குளிரிலும் வரக்கூடிய பல நோய்களிலிருந்து இது பாதுகாப்பளிக்கிறது. இக்காலத்தில் கஞ்சி என்ற பெயரில் எதையோ காய்ச்சி அருந்துகிறார்கள்.
("நம்பிக்கை ரகசியங்கள்' எனும் நூலிலிருந்து)
உ.இராசமாணிக்கம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com