விஜய் நடித்து வெளிவந்த "ஷாஜஹான்' படத்தை இயக்கியவர் ரவி அப்புலு. தற்போது சுமார் 15 வருட இடைவெளிக்குப் பின் இவர் எழுதி இயக்கி வரும் படம் "செயல்'. சி.ஆர்.கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் ராஜன் தேஜேஸ்வர், தருஷி, ரேணுகா, முனீஸ்காந்த், "சூப்பர் குட்' சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடு
களம் ஜெயபாலன், தீனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படம் குறித்து இயக்குநர் பேசும் போது, ""வட சென்னையில் தங்கசாலை மார்கெட்டை தன் வசம் வைத்துக் கொண்டிருக்கும் தண்டபாணியை, அங்கு மளிகை பொருள்கள் வாங்க வந்த ஹீரோ எதிர்பாராத விதமாக அடிக்க நேரிடுகிறது.இதனால் மார்கெட்டில் ரவுடி தண்டபாணியின் மீது மக்கள் வைத்திருந்த பயம் போய்விடுகிறது இதனால் அவன் மார்கெட்டை இழக்க நேரிடுகிறது. மீண்டும் அந்த மார்கெட்டை பிடிக்க வேண்டும் என்றால், ஹீரோவை அதே மார்கெட்டில் வைத்து பொதுமக்கள் பார்க்கும்படி அடிக்க வேண்டும். ஹீரோவை மார்கெட்டில் வைத்து அடித்தால் மட்டுமே ரவுடி தண்டபாணியின் கைக்கு மார்கெட் கிடைக்கும்.
இந்த சூழலில் ரவுடி ஹீரோவை அடித்தானா? அல்லது ரவுடியை ஹீரோ அடித்தானா ? மார்கெட் யார் வசம் சென்றது என்பதுதான் கதை. காட்சிகள் முழுக்க முழுக்க வட சென்னை பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன'' என்றார்.