""எனக்குப் பேச்சு ஒரு தொழில் அன்று; மேடைக் கலையும் அன்று. அது என் வாழ்க்கைப் போராட்டம். நான் நம்பிய கொள்கையை விளக்கக் கிடைத்த சந்தர்ப்பம். மேடை ஒரு போர்க்களம். மேடைப் பேச்சு, அலங்கார நடை பொழுதுபோக்குச் சமாசாரம் அன்று. அக்னி நெஞ்சுக்குள் பற்றி எரிய வேண்டும். அது வாய்மொழியாக ஆவேசப் பொறிகளாகக் கொட்ட வேண்டும்.