ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "அருவா சண்ட'. ராஜா, மாளவிகா மேனன், கஞ்சா கருப்பு, சரண்யா பொன்வண்ணன், "ஆடுகளம்' நரேன், செüந்தர்ராஜா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் ஆதிராஜன். படம் குறித்து இயக்குநர் பேசும் போது... ""காதல் சண்டையும், கபடிச் சண்டையும்தான் இப்படத்தின் கதைக்களம். வளர்ச்சியடைந்த நாகரிக சமுதாயத்திலும் நீரு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கிறது சாதி வெறி. தென்மாவட்டங்களில் அது கொழுந்து விட்டு எரிகிறது. தருமபுரி கலவரங்கள், வட மாவட்டங்களிலும் சாதியின் வன்மத்தை பதிவு செய்கின்றன. இப்படிப்பட்ட கெüரவக் கொலைகளின் நியாய, அநியாயங்களை பொறி பறக்கும் வார்த்தைகளால் அலசும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது இதன் திரைக்கதை. கதையின் பின்னணியாக கபடி விளையாட்டை முன் நிறுத்தி இருக்கிறோம். கபடி வீரன் ஒருவனின் லட்சியங்களும், உற்சாகமும்தான் கதை. அந்த வீரனுக்குள் வரும் காதல், அவனை எந்த எல்லைக்கு எடுத்துச் சென்றது, அதனால் நடந்த சம்பவங்கள் என்ன என்பது கிளைமாக்ஸ். சமீபத்தில் இயக்குநர் அமீர் இப்படத்தை டீஸரை வெளியிட்டுள்ளார். இந்த டீஸர் ரசிகர்களின் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. தரண் இசையமைப்பில் வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். சந்தோஷ்பாண்டி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு வி.ஜே.சாபு, கலை சுரேஷ் கல்லேரி, சண்டை பயிற்சி தளபதி தினேஷ். மதுரை, பொள்ளாச்சி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது'' என்றார்.