"பாகுபலி', "பாக்மதி' வெற்றிக்கு பிறகு அனுஷ்காவுக்கு படங்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் எதையும் ஒப்புக்கொள்ளாமல் தவிர்த்து வருகிறார். அவருக்கு 36 வயது ஆன நிலையில் குடும்பத்தினர் அவரை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி வருகின்றனர்.
படங்களில் நடிப்பதை காரணம் காட்டி இதுவரை திருமணத்தை தள்ளிப்போட்டு வந்தார். தற்போது குடும்பத்தினரின் வற்புறுத்தல் அதிகரித்ததையடுத்து திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதனால் அவருக்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஒரு சில மாப்பிள்ளைகளின் புகைப்படத்தை அவருக்கு காட்டியிருக்கின்றனர். பொருத்தமான மாப்பிள்ளையை நீங்களே தேர்வு செய்யுங்கள் என பெற்றோரிடமே பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார். அனுஷ்காவுக்கு தோஷம் இருந்ததால்தான் திருமணம் தள்ளிப்போவதாக ஜோதிடர்கள் கூறினர். இதையடுத்து வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அனுஷ்காவும் வட மாநிலத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று தோஷ நிவர்த்தி பூஜையில் ஈடுபட்டார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் அனுஷ்கா திருமணத்தை நடத்தி முடிக்க திட்ட மிடப்பட்டிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் முடுக்கி விட்டுள்ளனர். பிரபாஸ், அனுஷ்கா காதலிப்பதாக ஏற்கெனவேதகவல்கள் வெளிவந்தன, ஆனால் இருவரும் நல்ல நண்பர்களாக மட்டுமே இருக்கிறோம். எங்களுக்குள் காதல் எதுவும் இல்லை என்று ஏற்கெனவே அனுஷ்கா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.