எழுவாய் தமிழா 

அந்தந்த காலகட்டங்களில் பரவலாக பேசப்படும் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இசை ஆல்பங்கள் தயாரித்து வெளியிடப்படுவது தொடர்ந்து வண்ணம் உள்ளது
எழுவாய் தமிழா 

அந்தந்த காலகட்டங்களில் பரவலாக பேசப்படும் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இசை ஆல்பங்கள் தயாரித்து வெளியிடப்படுவது தொடர்ந்து வண்ணம் உள்ளது. ஹாலிவுட்டில் சினிமாக்களை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த வகை ஆல்பங்கள் ஆரம்பத்தில் வெளியிடப்பட்டு வந்தன. சமீபமாக தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் பிரச்னைகளை முன் வைக்கும் விதமாக இசை மற்றும் வீடியோ ஆல்பங்களை உருவாக்கி வருகின்றனர். ஜல்லிக்கட்டு பிரச்னையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஒன்று திரட்ட இவ்வகை ஆல்பங்கள் பெரிதும் உதவின. சினிமாவில் பிரபலமாக உள்ள ஹிப்ஹாப் ஆதி, ஜி.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்டோரும் இந்த ஆல்பங்களை வெளியிட்டனர். இந்த வரிசையில் அடுத்து உருவாகியுள்ள ஆல்பம் "எழுவாய் தமிழா'. தமிழகத்தின் இன்றைய அன்றாட பிரச்னைகளை முன்வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, இந்த ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் நவீன் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த வீடியோ ஆல்பம் ஒரே ஒரு பாடலைக் கொண்டது. "எழுவாய் தமிழா....' எனத் தொடங்கும் இப்பாடலை ரேஷ்மன் எழுதியுள்ளார். சௌ.பாண்டிகுமார் ஒளிப்பதிவில் சந்தோஷ் நடனம் அமைத்துள்ளார். இதன் வெளியீட்டு விழாவில் கவிஞர்கள் பிறைசூடன், சிநேகன், இயக்குநர் டி.பி.கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகவை பிலிம்ஸ் அங்கயற்கண்ணன் தயாரித்துள்ளார். காளிங்கன் இயக்கியுள்ளார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com