உலகம் முழுவதுமான ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஹாலிவுட் படம் "ஜுராசிக் பார்க்'. இப்படத்தின் புதிய பாகம் வெளியாகவுள்ளது. ஃபாலன் கிங்டம். ஓவன் (கிறிஸ் ப்ராட்) மற்றும் கிளாரி (ப்ரைஸ் டல்லாஸ் ஹோவர்ட்) ஆகிய இருவரும், அழிந்துவரும் டைனோசர் இனத்தைக் காக்க முற்படும் பணியில் ஈடுபடுகின்றனர். அப்போது சிலரது சதிச்செயல்கள் பேராபத்துகளுக்கு வழிவகுக்கிறது. "இண்டோராப்டர்' என்ற அபாயகரமான டைனோசர் கட்டுக்காவலில் இருந்து தப்பிவிடுகிறது. அது மனிதர்களுக்கு எந்த விதத்தில் ஆபத்தாக அமைகிறது என்பதை பரபரப்பாக சொல்ல வருகிறது படம். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தயாரித்துள்ளார். பயோனா இயக்கியுள்ளார். தமிழிலும் இப்படம் ஜூன் 7-ஆம் தேதி வெளியாகவுள்ளது. ரஜினியின் "காலா' படமும் அதே நாளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.