நவராத்திரியின் போது ஒன்பது நாள்களும் செய்யவேண்டியவை:
ஒன்பது நாள்களும் போட வேண்டிய கோலங்கள்:
• முதல் நாள் - பொட்டு
• இரண்டாம் நாள் - கட்டம்
• மூன்றாம் நாள் - மலர்
• நான்காம் நாள் - படிக்கட்டு
• ஐந்தாம் நாள் - பறவையினம்
• ஆறாம் நாள் - தேவி நாமம்
• ஏழாம் நாள் - திட்டாணி (வெள்ளை மலர்களால் ஆன கோலம்)
• எட்டாம் நாள் - பத்மம் (தாமரைக் கோலம்)
• ஒன்பதாம் நாள் - ஆயுதம் (வாசனைப் பொடிகளை கலந்து கோலமிட்டால் சிறப்பு)
ஒன்பது நாள்களும் பாட வேண்டிய ராகங்கள்:
• முதல்நாள் - தோடி
• இரண்டாம் நாள் - கல்யாணி
• மூன்றாம் நாள் - காம்போதி, கௌளை
• நான்காம் நாள் - பைரவி
• ஐந்தாம் நாள் - பந்துவராளி
• ஆறாம் நாள் - நீலாம்பரி
• ஏழாம் நாள் - பிலஹரி
• எட்டாம் நாள் - புன்னாகவராளி
• ஒன்பதாம் நாள் - வஸந்தா
ஒன்பது நாள்களும் அணிவிக்க வேண்டிய மாலைகள்:
• முதல் நாள் - மல்லிகை
• இரண்டாம் நாள் - முல்லை
• மூன்றாம் நாள் - செண்பகம், மரு
• நான்காம் நாள் - ஜாதிமல்லி
• ஐந்தாம் நாள் - பாரிஜாதம் அல்லது வாசனை மலர்கள்
• ஆறாம் நாள் - செம்பருத்தி
• ஏழாம் நாள் - தாழம்பூ, பாரிஜாதம், விபூதிப்பச்சிலை
• எட்டாம் நாள் - சம்பங்கி, மருதாணிப்பூ
• ஒன்பதாம் நாள் - தாமரை, மரிக்கொழுந்து
ஒன்பது நாள்களும் விருந்தினருக்குக் கொடுக்க வேண்டிய பழங்கள்:
• முதல் நாள் - வாழைப்பழம்
• இரண்டாம் நாள் - மாம்பழம்
• மூன்றாம் நாள் - பலாப்பழம்
• நான்காம் நாள் - கொய்யாப்பழம்
• ஐந்தாம் நாள் - மாதுளை
• ஆறாம் நாள் - ஆரஞ்சு
• ஏழாம் நாள் - பேரிச்சம்பழம்
• எட்டாம் நாள் - திராட்சை
• ஒன்பதாம் நாள் - நாவல் பழம்
ஒன்பது நாள்களும் செய்ய வேண்டிய பிரசாதங்கள்:
• முதல் நாள் - சுண்டல், வெண்பொங்கல்
• இரண்டாம் நாள் - புளியோதரை
• மூன்றாம் நாள் - சர்க்கரைப் பொங்கல்
• நான்காம் நாள் - கதம்பம் (காய்கறிகள் கலந்த கதம்ப சாதம்)
• ஐந்தாம் நாள் - ததியோதனம் தயிர்சாதம், பொங்கல்
• ஆறாம் நாள் - தேங்காய் சாதம்
• ஏழாம் நாள் - எலுமிச்சை சாதம்
• எட்டாம் நாள் - பாயஸôன்னம் ( பால் சாதம்)
• ஒன்பதாம் நாள் - அக்கார அடிசில் (பச்சரிசி,பால், சர்க்கரை கலந்த பால் பாயசம்), சர்க்கரை பொங்கல்