• அரிசியில் சிறிது உப்புத்தூளைக் கலந்து வைத்து விட்டால் எத்தனை நாள்கள் சேமித்து வைத்திருந்தாலும் புதிதாகவும் புழு, பூச்சி பிடிக்காமலும் இருக்கும்.
• கறுப்பு சில்க் துணிகளைத் துவைப்பதற்கு முன் உப்புக் கரைத்த நீரில் அமிழ்த்திச் சிறிது நேரம் கழித்து நீலம் கலந்த நீரில் முக்கி எடுத்தால் கறுப்பு நிறம் எடுப்பாக இருக்கும்.
• பட்டுத் துணிகளைத் துவைக்கும் போது உப்பு கலந்த நீரில் அலசினால் பட்டுத் துணி மிருதுத் தன்மையும் நிறமும் மாறாமலிருக்கும்.
("உயிர் வாழ உதவும் உப்பு' என்ற நூலிருந்து)