பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை அதிகாரியாக பணிபுரியும் அருந்ததி பட்டாச்சார்யா 1977-இல் அதே வங்கியில் பணியில் சேர்ந்தார். 2014-ஆம் ஆண்டில் வங்கியின் தலைவர் என்ற முதன்மைப் பதவிக்கு வந்தார்.
ஒரு தேசிய வங்கியில் உயர்ந்த பதவியை அடைந்த முதல் பெண் அருந்ததிதான். பணியின்போது பெண்கள் சார்ந்த விடுப்புகளில், இவர் அனுமதி அளித்த குறிப்பிட்ட ஒரு விடுப்பு அனைவரையும் கவர்ந்தது. குழந்தை வளர்ப்புக்காக 2 ஆண்டுகள் விடுப்பு எடுக்கலாம் என்பதை, வீட்டில் உள்ள முதியோரைக் கவனித்துக் கொள்ளவும் இந்த 2 ஆண்டுகள் விடுப்பை மாற்றிக் கொள்ளலாம் என தனது ஊழியர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளார் அருந்ததி.