அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகளும் அமெரிக்க அதிபரின் ஆலோசகருமான இவாங்கா டிரம்ப் பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற தலைப்பிலான உலக கருத்தரங்கில் பங்கேற்க அண்மையில் ஜப்பான் நாட்டுக்குச் சென்றார்.
அப்போது ரசிகர்களின் அன்புத் தொல்லையில் இருந்தும், எதிரிகளின் பயங்கரத் தாக்குதலில் இருந்தும் அவரைக் காப்பாற்றுவதற்காக ஒரு பாதுகாப்புப் படையை டோக்கியோ மெட்ரோபோலிடன் காவல் துறை உருவாக்கியது.
இதில் என்ன விசேஷம் என்றால், இந்தப் படையில் இடம்பெற்றிருந்தது முழுக்க முழுக்க பெண்கள். முதன்முறையாக இதுபோன்ற முயற்சியில் ஜப்பான் காவல் துறை இறங்கியது.
முன்னதாக மக்கள் கூட்டத்திலிருந்து ஒரு பரிசுடன் இவாங்காவை நோக்கிப் பாயும் இளம்பெண்ணை பெண் பாதுகாப்பு படையினர் கட்டுப்படுத்துவது போன்ற பாதுகாப்பு ஒத்திகையும் நடைபெற்றது.