"போதை பழக்கத்திலிருந்து மீண்டது எப்படி?' என்ற புத்தகத்தை எழுதியுள்ள நடிகையும், தயாரிப்பாளருமான பூஜாபட், அடுத்து சுவாரசியமான, பிரச்னைக்குரிய தன் தந்தை மகேஷ் பட்டைப் பற்றி புத்தகம் எழுதப் போகிறாராம். "என் சுயசரிதையை எழுதும்படி பலர் வற்புறுத்துகிறார்கள். எனக்கும் வயதாகி வரும் நேரத்தில் எங்கள் வாழ்க்கையில் தொடர்பு கொண்டவர்களைப் பற்றி மனதில் உள்ள உண்மைகளை எழுதுவது சரியல்ல. மற்றவர்களை சங்கடப்படுத்தவும் விரும்பவில்லை. அதனால்தான் என் தந்தையை பற்றி மட்டும் எழுத விரும்புகிறேன்'' என்கிறார் பூஜாபட்.