நடிப்புக்கு இடைவெளி விட்டுவிட்டு தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் வேலைகளையும், இசைப் பணியையும் தொடர முடிவு செய்து, சென்னையில் தனது தந்தை கமல்ஹாசனின் அலுவகத்திலேயே பணிகளைச் செய்து வருகிறார் ஸ்ருதிஹாசன். "இந்த இடத்தில் இருந்துதான் எனது தந்தையும், பெரியப்பா சந்திரஹாசனும் தங்களது பணிகளைத் தொடங்கினார்கள் என்பதால் எனக்கு மிகவும் சென்டிமென்ட்டான இடம் இது. பல்வேறு கிரியேட்டிவ் ஆன நபர்களை இசையால் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்'' என்கிறார் ஸ்ருதி.