1969 -ஆம் ஆண்டு கொல்கத்தா இரவு விடுதியொன்றில் பாடத் தொடங்கிய உஷா உதுப், கடந்த 50 ஆண்டுகளில் 17 இந்திய மொழிகளிலும், 8 அயல்நாட்டு மொழிகளிலும் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். "மேடையேற விரும்பும் இளம் பாடகர்களுக்கு நான் கூறும் அறிவுரை இதுதான்: "முதலில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்களுக்கென்று கனவுகள் இருந்தால் அதை கை விடாதீர்கள். உங்கள் திறமையை குறைத்து மதிப்பிடாமல் 100 சதவீதம் நேர்மையுடன் மேடையில் பாட வேண்டும்'' என்கிறார் உஷாஉதுப்.