2002-ஆம் ஆண்டு வெடி விபத்தொன்றில் தன் இரு மணிக்கட்டுகளையும் இழந்த மாளவிகா ஐயர் (29) சோர்ந்துவிடாமல் தன் தாயார் உதவியுடன் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு பல சாதனைகளை படைத்துள்ளார். இவரது வாழ்க்கையை ஸ்ரீராம் ஜெகநாதன் என்பவர் "மாயி' என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார். மாற்றுத்திறனாளிகளும் இந்த சமூகத்தில் ஒரு அங்கம். என்பதை இன்றைய தலைமுறையினருக்கு அறிவுறுத்தும் வகையில் மாளவிகா எழுதிய ஆய்வு கட்டுரை மூலம் அவருக்கு முனைவர் பட்டம் கிடைத்துள்ளது. இதை பாராட்டும் வகையில் "நாரி சக்தி புரஷ்கார்' விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அண்மையில் வழங்கினார்.
- அருண்