பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் முன்னாள் மனைவியும், மாடலுமான பத்மா லட்சுமிக்கு கிருஷ்ணா தியா லட்சுமி டெல் என்ற பெயரில் பெண் குழந்தை உள்ளது. "தனிமை தாயாக மகளை வளர்ப்பது சிரமமாக இல்லையா'' என்று கேட்டபோது, "ஒரு குழந்தைக்கு தாயாக இருப்பதே மகிழ்ச்சிதான். என்னை நான் தனிமைத் தாயாக நினைக்கவே இல்லை. என் மகளுக்கு உடை, கல்வி, உறவு என பார்த்து கொள்ள குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் அவள் மூலம் மகள் என்ற உறவு எனக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்கிறார் பத்மா லட்சுமி.