சுமை குறையும்!

ஆப்ரஹாம் லிங்கனிடம் ஒருவர், ""எனக்கு ஒருவன் சகிக்க முடியாத துன்பம் இழைத்து விட்டான்! அதை என்னால் மறக்க முடியவில்லை!'' என்றார்.
அ.ராஜாரகுமான், கம்பம். 
அ.ராஜாரகுமான், கம்பம். 

ஆப்ரஹாம் லிங்கனிடம் ஒருவர், ""எனக்கு ஒருவன் சகிக்க முடியாத துன்பம் இழைத்து விட்டான்! அதை என்னால் மறக்க முடியவில்லை!'' என்றார். அவரிடம் லிங்கன், "" அவனுக்கு மிகக் கடுமையாக ஒரு கடிதம் எழுதி அதை என்னிடம் காண்பியுங்கள்!'' என்றார். அவரும் உடனே மிகமிகக் கடுமையாக காரசாரமாக தன்னைத் துன்புறுத்தியவனுக்கு ஒரு கடிதம் எழுதி அதை லிங்கனிடம் காண்பித்தார். லிங்கனும் அதைப்படித்தார். புன்சிரித்தார். 
""என்ன தபாலில் சேர்த்துவிடலாமா?'' என்று கேட்டார் கடிதம் எழுதியவர். ""வேண்டாம்!'' கடிதத்தைக் கிழித்து எறிந்து விடுங்கள்! நடந்ததை மறந்து விடுங்கள்! மனமாற மன்னித்து விடுங்கள். உங்கள் சுமை குறைந்துவிடும்'' என்று கூறினார் லிங்கன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com