1. தாகம் போக்கும் தண்ணீர் இல்லை... களைப்பைப் போக்கும் மருந்தும் இல்லை... சண்டைக்குச் செல்லும் இது ஆயுதமும் இல்லை... இது என்ன?
2. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான்... இவன் யார்?
3. சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை... இவன் யார்?
4. அடிக்காத பிள்ளை, அலறித் துடிக்கும்... இது என்ன?
5. அக்கா விதைத்த முத்து... அள்ள முடியாத முத்து... இது என்ன?
6. ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர்... இது என்ன?
7. நீந்தத் தெரியும் மீன் இல்லை... நடக்கத் தெரியும் மனிதனும் இல்லை... இறக்கை இருந்தும் பறக்காத பறவை... இது என்ன?
8. விடிய விடிய பூந்தோட்டம், விடிந்து பார்த்தால் வெறுந் தோட்டம்... இது என்ன?
9. தண்ணீரில் நீந்தி வரும், தரையிலோ தாண்டி வரும்...இது என்ன?
விடைகள்:
1. சோடா
2. கடல் அலை
3. தீக்குச்சி
4. தொலைபேசி
5. கோலம்
6. கானல் நீர், கண்ணீர்
7. வாத்து
8. நட்சத்திரங்கள்
9. தவளை
-ரொசிட்டா