பொன்மொழிகள்!  

சோம்பேறி என்பவன் இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம். அது நின்றாலும் ஓடினாலும் பயனில்லை. 
பொன்மொழிகள்!  

* சோம்பேறி என்பவன் இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம். அது நின்றாலும் ஓடினாலும் பயனில்லை. 
- கூப்பர்

* உயிர் உள்ளவரை உழைத்து வாழ விரும்புகிறேன். உழைக்க உழைக்கத்தான் எனக்கு உயிர் வாழ விருப்பம் அதிகரிக்கிறது!
- பெர்னார்ட்ஷா

* துயரம் என்னும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்பதை தடுக்க இயலாது. ஆனால் அவை உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம். 
- ஸ்டீலி

* எதைக் கண்டு ஒரு மனிதனுக்கு சிரிப்பு வருகிறது என்று கவனி!....அவன் எப்படிப்பட்டவன் என்று மிக நன்றாகத் தெரிந்து கொண்டு விடலாம்!  
-  கதே

* உயர, உயரத்தான் நமக்கு மேலே எத்தனை பேர் உள்ளனர் என்று புரிகிறது! 
- யாரோ

* முதலாவது செல்வம் ஆரோக்கியமே! 
- எமர்சன்

* முன்னேறும் சந்தர்ப்பங்கள் தானாக வருவதில்லை. அவை உருவாக்கப்படுகின்றன!!  
-  அரைசன் ஸ்வெட்மார்டன்

* நான் மெதுவாக நடப்பவன்தான்! ஆனால் ஒருபோதும் பின் வாங்குவதில்லை! 
- ஆபிரஹாம் லிங்கன்

* குழந்தையாய் பிறந்து, வளர்ந்து சிறுவனாகி, வாலிபனாய் மகிழும் நாம் வயது முதிர்ந்து இறப்பதை விரும்புவதில்லை. 
- புத்தர்

* வெறுப்பது யாராக இருந்தாலும்,  நேசிப்பது நீங்களாக இருங்கள்! 
- அன்னை தெரசா

தொகுப்பு : சி.பழனிசாமி, சஜிபிரபு மாறச்சன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com