* சோம்பேறி என்பவன் இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம். அது நின்றாலும் ஓடினாலும் பயனில்லை.
- கூப்பர்
* உயிர் உள்ளவரை உழைத்து வாழ விரும்புகிறேன். உழைக்க உழைக்கத்தான் எனக்கு உயிர் வாழ விருப்பம் அதிகரிக்கிறது!
- பெர்னார்ட்ஷா
* துயரம் என்னும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்பதை தடுக்க இயலாது. ஆனால் அவை உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம்.
- ஸ்டீலி
* எதைக் கண்டு ஒரு மனிதனுக்கு சிரிப்பு வருகிறது என்று கவனி!....அவன் எப்படிப்பட்டவன் என்று மிக நன்றாகத் தெரிந்து கொண்டு விடலாம்!
- கதே
* உயர, உயரத்தான் நமக்கு மேலே எத்தனை பேர் உள்ளனர் என்று புரிகிறது!
- யாரோ
* முதலாவது செல்வம் ஆரோக்கியமே!
- எமர்சன்
* முன்னேறும் சந்தர்ப்பங்கள் தானாக வருவதில்லை. அவை உருவாக்கப்படுகின்றன!!
- அரைசன் ஸ்வெட்மார்டன்
* நான் மெதுவாக நடப்பவன்தான்! ஆனால் ஒருபோதும் பின் வாங்குவதில்லை!
- ஆபிரஹாம் லிங்கன்
* குழந்தையாய் பிறந்து, வளர்ந்து சிறுவனாகி, வாலிபனாய் மகிழும் நாம் வயது முதிர்ந்து இறப்பதை விரும்புவதில்லை.
- புத்தர்
* வெறுப்பது யாராக இருந்தாலும், நேசிப்பது நீங்களாக இருங்கள்!
- அன்னை தெரசா
தொகுப்பு : சி.பழனிசாமி, சஜிபிரபு மாறச்சன்