"தாத்தா ஒரு கதை சொல்லு தாத்தா!''
"சரி.... சொல்றேன் கேளு!..... தைமூர்னு ஒரு ராஜா!''
"ம்..''
"அவரு சபையிலே கிர்மாணின்னு ஒரு கவிஞர் இருந்தாரு''
"ம்''
"அந்தக் கவிஞர் யாருக்கும் பயப்பட மாட்டாரு!''
"ராஜாவுக்குக் கூடவா?''
"ஆமாம்....ஒரு நாள் கவிஞர் கிட்டே, "கவிஞரே என்னை விக்கறதாயிருந்தா எவ்வளவு விலை கொடுப்பீங்க?'ன்னு கேட்டாரு!...... யாரை விக்கறதாயிருந்தா?''
"ராஜாவை!''
"வெரி குட்!..... யாரு கிட்டே கேட்டாரு?''
"கவிஞர் கிர்மானி கிட்டே!''
"சமத்து!.... அதுக்கு கவிஞர், "அம்பது பவுன் கொடுக்கலாம்' அப்படீன்னாரு!....அதுக்கு ராஜா, "என் இடுப்பிலே கட்டியிருக்கிற கச்சைக்கே அந்த விலை தரலாமே!' ன்னாரு!......அதுக்கு கவிஞர் கிர்மானி, "அதுக்குத்தான் அந்த விலை! உங்களோட விலை ஒரு செப்புக் காசு கூடத் தேறாது!'ன்னு தைரியமா சொல்லிட்டாரு!''
"ராஜா கோவிச்சுக்கிட்டாரா?''
"அதான் இல்லை! கிர்மானியோட தைரியத்தை ரொம்பப் பாராட்டினாரு!''
"ரொம்ப நல்ல ராஜா!''
-எல்.நஞ்சன், முக்கிமலை.