* எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம். இன்னொன்று மெளனம்.
• எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.
• ஆசையில்லாத முயற்சியினால் பயனில்லை...முயற்சியில்லாத ஆசையினாலும் பயனில்லை.
• செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒரு போதும் உதவி செய்யாது.
• சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தை விட, சண்டையே இல்லாத சமாதானமே மிகச் சிறந்தது.
• பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.
• அதிகம் பேசாதவனை உலகம் விரும்பும். அளந்து பேசுபவனை மதிக்கும். அதிகம் செயல் படுபவனை துதிக்கும்.
• உலகம் ஒரு விசித்திரமான பள்ளிக்கூடம். இங்கே பாடம் சொல்லிக்கொடுத்து பரீட்சை நடப்பதில்லை. பரீட்சை முடிந்த பின்பே பாடங்கள் கிடைக்கிறது.
• சிக்கனம் என்பது குறைவாகச் செலவு செய்வதல்ல....உபயோகமாகச் செலவு செய்வதுதான்.
சஜிபிரபு மாறச்சன், சரவணந்தேரி.