1. ஷாக் அடிக்க மாட்டான், ஆனால் ஒளிர்வான்...
2. தன்னைவிடப் பெரியவரைச் சுற்றி வரும் இவன் தானும் மறக்காமல் சுற்றுவான்..
3. இருட்டிய பிறகுதான் வருவான், ஆனால் இவன் வருவது திருடுவதற்காக அல்ல...
4. சட்டை மேல் சட்டை போட்டிருப்பான், ஆனாலும் இவனுக்கு வியர்க்காது...
5. உள்ளே இருக்கும்போது சுறுசுறுப்பாக இருப்பவன் வெளியே வந்தால் தவித்துப் போவான்...
6. நீரிலும் நிலத்திலும் காணப்படும் இந்தப் பாறைக்குக் கால்கள் உண்டு...
7. ஆயிரம் முடிச்சுக்கள் இருந்தாலும் கூடவே ஆயிரம் ஓட்டைகளும் இருக்கும்...
8. கரையோ ஐந்து வாய்க்காலோ நான்குதான்...
9. கோபம் வந்தால் குலைக்கும் நாய், அமைதி வந்தால் முடங்கிப் போகும்...
-ரொசிட்டா
விடைகள்:
1. மின்மினிப் பூச்சி
2. பூமி
3. நிலா
4. வெங்காயம்
5. மீன்
6. ஆமை
7. வலை
8. கை
9. நாக்கு