கண்ணிற்கு அணிகலன் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப்படும்.
- திருக்குறள்
கண்ணுக்கு அழகு என்பது
கருணை கொண்ட பார்வையே
கனிவில்லாத கண்களைப்
புண்கள் என்று சொல்லலாம்
அருளைக் கண்களில் கனியச்செய்து
அன்பால் பார்க்கும் பார்வையே
கண்ணோட்டம் என்று சொல்வது
அதுவே கண்ணுக்கு அணிகலன்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்