குறள் பாட்டு: கண்ணோட்டம் 

கண்ணுக்கு அழகு என்பது கருணை கொண்ட பார்வையே
குறள் பாட்டு: கண்ணோட்டம் 

கண்ணிற்கு அணிகலன் கண்ணோட்டம் அஃதின்றேல்
 புண்ணென்று உணரப்படும்.
                                                                          - திருக்குறள்
 கண்ணுக்கு அழகு என்பது
 கருணை கொண்ட பார்வையே
 கனிவில்லாத கண்களைப்
 புண்கள் என்று சொல்லலாம்
 
 அருளைக் கண்களில் கனியச்செய்து
 அன்பால் பார்க்கும் பார்வையே
 கண்ணோட்டம் என்று சொல்வது
 அதுவே கண்ணுக்கு அணிகலன்.
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com