* இறைவனிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். நன்றி உணர்வை வளர்க்கும் மனப்பாங்கை பயிற்றுவித்துக் கொள்ளுங்கள்.
* ஆற்றலுடன் பணிவையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
* பலன்களை எதிர்பார்க்காது பணிபுரியுங்கள். இதனால் தீய ஊழ்வினைப் பலன்களை ஒழித்து மகிழ்ச்சி பெறலாம்.
* தியானம் செய்யுங்கள்!....சாந்தம் மிகுந்த கடவுளின் அம்சம் உங்களிடம் உள்ளது என்று தியானத்தின் மூலம் உணருங்கள்.
* பிறர் பேசுவதை உற்றுக் கேளுங்கள். கவனிக்கும் திறனை வளருங்கள்.
* உங்கள் சிந்தனைகள் மனப்போக்கு ஆகியவற்றில் கவனமாயிருங்கள்.
* நல்லறிஞர் துணை நாடுங்கள்.
* உங்கள் நேரத்தை வம்பிலும் குறை கூறுவதிலும் வீணாக்காதீர்கள்.
* தற்போதைய செயலிலும் காலத்திலும் ஒன்றியிருங்கள்.
* உங்கள் செயல்களை ஆன்மீகமாக்கி விடுங்கள்!