அறிந்து ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தான் என்று ஏவற்பாற்றன்று.
- திருக்குறள்
செயலைச் செய்யும் வழிமுறை
தெரிந்து செய்யும் நபரைத்தான்
தேர்வு செய்து பணியினை
ஒப்படைக்க வேண்டுமே
வழிமுறைகள் தெரியாமல்
அரைகுறையாய் உள்ளவரை
சிறந்தவன் என்று கருதியே
பொறுப்புக் கொடுக்கக் கூடாது
-ஆசி.கண்ணம்பிரத்தினம்