* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
- அனடோல் பிரான்ஸிஸ்
* வழிகாட்டி இல்லாமல் தம்மைத்தாமே வழிகாட்டிகளாகக் கொள்பவர்கள் முன்னேறுவதில்லை.
- ஆலிவர் கோல்ட்ஸ்மித்
* சிரிக்கத் தெரியாதவர்கள் விலங்குகளுக்கு ஒப்பானவர்கள்.
- என்.எஸ்.கிருஷ்ணன்
* காலி வயிறுடன் அலைபவர்களுக்கு மத போதனை உதவாது.
- ராமகிருஷ்ணர்
* உழைத்து வாழ்பவனே வணங்கத்தக்கவன்! வாழ்த்துக்குரியவன்! அந்த உழைப்பாளிக்கு ஊறு ஏற்படுவது சமுதாயத்தின்
நல்வாழ்வையே புரையோடச் செய்வதாகும். - அறிஞர் அண்ணா
* கவிதை என்பது குரலுள்ள ஓவியம்! ஓவியம் என்பது மெüனமான கவிதை!
- சிமோனிடஸ்
* ஆடுகளைப் போன்ற ஒரு ஜன சமுதாயம் ஓநாய்களைப் போன்ற ஆட்சியாளர்களைத்தான் பெறும்!
- டிஜரவெனல்
* ஒரு புத்திசாலியால் முட்டாள் போல் சில சமயங்களில் இருக்க முடியும். ஆனால் ஒரு முட்டாள் புத்திசாலியைப்போல் எப்போதுமே இருக்கமுடியாது!
- கர்ட் சோலஸ்கி
* பொறுமை பிரார்த்தனையைவிட உயர்ந்தது! - புத்தர்
* வாழ்க்கையில் ஒழுங்கு வந்துவிட்டதா?....அப்படியானால் கட்டுப்பாடும் வந்துவிட்டது!
- யாரோ
தொகுப்பு : முக்கிமலை நஞ்சன்