(அறத்துப்பால் - அதிகாரம் 12 -பாடல் 6)
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவுஒரீஇ அல்ல செயின்.
-திருக்குறள்
நடுநிலையிலிருந்து
உள்ளம் தடுமாறி
தீய செயலைச் செய்தால்
தேடி வரும் கேடு
நியாய நிலை தவறி
பாவச் செயல் செய்தால்
கெட்டுப் போகும் வழியை
அழைத்து அழிவதாகும்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்