1. வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை...
2. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடி வரும் பந்தும் அல்ல...
3. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு...
4. மழைக்கேற்ற குடைதான், ஆனால் ஆள் நிற்கத்தான் இடமில்லை..
5. கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான்...
6. அள்ள அள்ளக் குறையாது, ஆனால் குடிக்க உதவாது...
7. முள்ளுக்குள்ளே முத்துக் குவலயம்...
8. வாயைப் பிளந்து வீதியோரங்களில் நிற்பான்....
9. முக்கண்ணன் சந்தைக்குப் போகின்றான்...
விடைகள்:
1. செருப்பு, 2. கடல், 3. பாய், 4. காளான், 5. பாம்பு 6. கடல் நீர், 7. பலாப்பழம், 8. தபால் பெட்டி 9. தேங்காய்