நல்லாதனார்
செந்தீ முதல்வ ரறநினைந்து வாழ்தலும்
வெஞ்சின வேந்தன் முறைநெறியிற் - சேர்தலும்
பெண்பால் கொழுநன் வழிச்செலவு மிம்மூன்றும்
திங்கண் மும்மாரிக்கு வித்து. (பாடல்-98)
சிவந்த முத்தீ வேள்விக்கும் முதன்மையான அந்தணர் தமக்குரிய அறங்களை மறவாது செய்து
வாழ்தலும்; கொடிய கோபத்தை உடைய அரசன், நீதி நெறிக்கண் செல்லுதலும்; ஒரு பெண் கணவனுடைய குறிப்பின் வழியே செல்லுதலும் ஆகிய இந்த மூன்று செயல்களும் மாதந்தோறும் பொழிய வேண்டிய மூன்று (மும்முறை) மழைக்கும் காரணங்களாகும். அந்தணர் அறத்தாலும், அரசன் நீதியாலும், மகளிர் கற்பாலும்
திங்கள் மும்மாரிப் பொழியும்.