விழுத்திணைத் தோன்றா தவனு மெழுத்தினை
ஒன்று முணராத வேழையும் - என்றும்
இறந்துரை காமுறு வானுமிம் மூவர்
பிறந்தும் பிறவா தவர். (பாடல்-92)
சிறந்த குடியில் (ஒழுக்கத்தால் உயர்ந்த) பிறவாதவனும்; கல்வியை சிறிதும் அறியாத
அறிவில்லாதவனும்; எப்பொழுதும் நெறி கடந்து பேசுதலை விரும்புவோனும் ஆகிய இந்த மூவரும் உலகில் பிறந்தும் பிறவாதவரேயாவர்.