நண்பிலார் மாட்டு நசைக்கிழமை செய்வானும்
பெண்பாலைக் காப்பிகழும் பேதையும் - பண்பில்
இழுக்கான சொல்லாடு வானுமிம் மூவர்
ஒழுக்கங் கடைப்பிடி யாதார். (பாடல்-94)
நட்புக் குணம் இல்லாதவரிடத்து நட்புரிமை செய்கின்றவனும்; தன் மனைவியைக் காத்தலை இகழுகின்ற அறிவிலியும்; குணமில்லாத குற்றமாகிய சொல்லைச் சொல்பவனும் ஆகிய இந்த மூவரும் தாம் ஒழுகும் திறத்தினை உறுதியாகக் கொள்ளாதவராவர்.