சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2018-19-ஆம் ஆண்டுக்கான வேளாண் படிப்புகளுக்கு சமவாய்ப்பு எண் இன்றுபுதன்கிழமை (ஜூலை 4) வெளியிடப்படுகிறது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: இந்தப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் வேளாண்மை (B.Sc., (Hons.) In Agriculture), இளம் அறிவியல் வேளாண்மை (சுயநிதி) (B.Sc., (Hons.) In Agriculture (Self Supporting) மற்றும் இளம் அறிவியல் தோட்டக்கலை (B.Sc., (Hons.) In Horticulture) ஆகிய படிப்புகளுக்கான சமவாய்ப்பு எண்ணை (Random Number) புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் வி.முருகேசன் வெளியிடுவதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.