முன்னாள் முதல்வர் ஆர்.குண்டுராவ் அறக்கட்டளை சார்பில் ஆக.15-ஆம் தேதி நடத்தப்படும் சுதந்திர தின விழாவில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கவிருக்கிறது.
இதுகுறித்துமுன்னாள் முதல்வர் ஆர்.குண்டுராவ் அறக்கட்டளை வெளியிட்ட செய்திக் குறிப்பு: முன்னாள் முதல்வர் ஆர்.குண்டுராவ் அறக்கட்டளையின் சார்பில் பெங்களூரு, சேஷாத்ரிபுரத்தில் உள்ளசிரூர் பூங்கா மைதானத்தில் ஆக.15-ஆம் தேதி காலை 9 மணி அளவில் நாட்டின் 71-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இந்தவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளும் காங்கிரஸ் மாநில செயல்தலைவர்தினேஷ் குண்டுராவ், தேசியக்கொடியை ஏற்றிவைத்து, சுதந்திரப் போராட்ட தியாகிகளைக் கெüரவிக்கிறார்.
மேலும் கல்வி, சுகாதாரம், மாற்றுத் திறனாளிகள், சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ள சாதனையாளர்களைக் கெüரவிக்கிறார். இதற்கு முன்னதாக, சுதந்திரப் போராட்டத்தை விளக்கும் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சியும் நடக்கவிருக்கிறது.