ஒடிஸா கைத்தறிக் கண்காட்சி

பாரம்பரிய கைத்தறி மற்றும் கைவினைப் பொருள் கண்காட்சியை நடிகையும், காங்கிரஸ் எம்.எல்.சி.யுமான ஜெயமாலா தொடக்கிவைத்தார்.

பாரம்பரிய கைத்தறி மற்றும் கைவினைப் பொருள் கண்காட்சியை நடிகையும், காங்கிரஸ் எம்.எல்.சி.யுமான ஜெயமாலா தொடக்கிவைத்தார்.
பெங்களூரு கர்நாடக சித்ரகலா பரிஷத்தில் வெள்ளிக்கிழமை ஒடிஸா பாரம்பரிய கைத்தறி மற்றும் கைவினைப்பொருள் கண்காட்சியை நடிகை ஜெயமாலா தொடக்கிவைத்தார். பின்னர், கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பொருள்களைப் பார்வையிட்டார். 
கண்காட்சி நிர்வாகியும், கர்நாடக சித்ரகலா பரிஷத்தின் செயலாளருமான கமலாக்ஷி கூறியது: கர்நாடக சித்ரகலா பரிஷத்தின் சார்பில் டிச. 17-ஆம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியில் கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா கிராமக் கலைஞர்கள் தயாரித்துள்ள கைவினைப் பொருள் தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன. 
தேசிய அளவிலான பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கதர் ஆடைகள், அலங்காரபொருள்கள், சேலைகள், ஜவுளிகள், மேற்குவங்கமாநிலத்தை சேர்ந்த பருத்திசேலைகள், மரவேலைபாடுகள், சணல் செருப்புகள், ஆபரணங்கள், பொம்மைகள், தரைவிரிப்புகள், புல் கால்மிதியடிகள் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் கண்காட்சியில் விற்பனைக்கு கிடைக்கின்றன. கண்காட்சி தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணிவரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும் என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com