கோலார் தங்கவயலில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
தங்கவயல் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கோலார் தங்கவயலில் உள்ள சங்க வளாகத்தில் கர்மவீரர் காமராஜரின் 115}ஆவது பிறந்த நாள்விழா சங்கத் தலைவர் சு.கலையரசன் தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், கோலார் தங்கவயலில் சிறப்பாக பொதுசேவை ஆற்றிவரும் காந்தி காமராசர் மன்றக் காப்பாளர்கள் கே.அனந்த்கிருஷ்ணன், எஸ்.வேலாயுதம், சி.கிருஷ்ணமூர்த்தி, குப்புசாமி, திருமுருகன், கருணாகரன், கோலார் மாவட்ட டாக்டர் கமல்ஹாசன் நற்பணி இயக்கப் பொறுப்பாளர்கள் வி.எஸ்.மூர்த்தி, ஏ.பாபு, எஸ்.ரமேஷ், தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் நாத்திகம் ஸ்ரீதர், கமல்முனுசாமி, சந்திரகுமார் ஆகியோருக்கு சேவைச் செம்மல் விருது வழங்கி கெüரவிக்கப்பட்டது.
விழாவை தொடக்கிவைத்த சங்கத் தலைவர் சு.கலையரசன், காமராஜரின் வாழ்க்கை, அரசியல், அரசாட்சியை விளக்கி பேசினார். விழாவுக்கான ஏற்பாடுகளை சங்க பொதுச் செயலர் ஜி.திருவரங்கம் செய்திருந்தார்.