பேருந்து பயண அட்டை மார்ச் 31-ஆம் தேதிக்குள் காலாவதியாகினாலும், எஸ்.எஸ்.எல்.சி தேர்வெழும் மாணவர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை காண்பித்து பேருந்தில் பயணிக்கலாம் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் மார்ச் 30 முதல் ஏப்.12 வரை எஸ்எஸ்எல்சி தேர்வெழுதும் மாணவர்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் தேர்வு முடியும் வரை பயணிக்க சலுகை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடம் பேருந்து பயண அட்டையைக் கேட்டு நடத்துநர்கள், ஓட்டுநர்கள் தொந்தரவு அளிக்கக் கூடாது எனவும் மாநகரப் போக்குவரத்துக்கு கழகம் அறிவுறுத்தியுள்ளது.