ஏரியில் பரிசல் கவிழ்ந்ததில், மீன் பிடிக்கச் சென்ற 2 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.
ராம் நகர் மாவட்டத்துக்குள்பட்ட அவரக்கெரே பகுதியைச் சேர்ந்தவர்கள் உமேஷ் (28), ரவிக்குமார் (19). இருவரும் சனிக்கிழமை மாலை பிடதி அருகே உள்ள நெல்லகுட்டே ஏரியில் பரிசலில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது பரிசல் கவிழ்ந்ததில், இருவரும், நீரில் மூழ்கினர். தகவலறிந்த போலீஸார், தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, இருவரும் இறந்த நிலையில் சடலங்களாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து பிடதி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.